சென்னை

தெற்கு ரயில்வே கடலூர் ஆட்சியரே ரயில் விபத்துக்கு காரணம் எனத் தெரிவித்துள்ளது.

இன்று காலை கடலூரில் செம்மங்குப்பம் அருகே கடலூர்-ஆலப்பாக்கம் இடையே பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்த வழியில் இருந்த ரயில்வே கேட் வழியே அந்த பள்ளி வேன் கடந்து செல்ல முயன்றது. பள்ளி வேன் சென்றபோது, அந்த பகுதியின் வழியே விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற ரயில் வேன் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது.

இதில், வேன் பல மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு வேனில் இருந்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டு பள்ளி மாணவ மாணவிகள் 3 பேர் பலியாகி உள்ளனர்.  தகவல் அறிந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு. போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிதுள்ளனர்

வேன் ஓட்டுநர் மற்றும் பள்ளி குழந்தைகள் பலர் காயம் அடைந்து உள்ளதாக் அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

, விபத்துபற்றி தெற்கு ரயில்வே,

ரயில்வேயின் முழு நிதியுதவியுடன் இந்த லெவல் கிராசிங்கிற்கு சுரங்க பாதை (அடிச்சாலை) அமைக்க தெற்கு ரயில்வே முன்பே ஒப்புதல் அளித்து விட்டது. ஆனால், கடந்த ஓராண்டாக இதற்கு கடலூர் மாவட்ட கலெக்டர் அனுமதி அளிக்கவில்லை இந்த துரதிர்ஷ்ட சம்பவத்தில், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்த நபர்களுக்காக ரயில்வே ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து கொள்வதுடன், இதற்காக மன்னிப்பும் கோருகிறது

எனத் தெரிவித்து உள்ளது.