இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 2ம் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்ஸில் 166 ரன்கள் பின்தங்கியுள்ளது தென்னாப்பிரிக்க அணி.

ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. ஆனால், அந்த அணியால் முதல் இன்னிங்ஸில் 272 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியின் பஹீம் அஷ்ரப் 78 ரன்களையும், பாபர் ஆஸம் 77 ரன்களையும் அடித்தனர்.

தென்னாப்பிரிக்கா சார்பில் ஆன்ட்ரிச் நார்ட்ஜே 5 விக்க‍ெட்டுகளையும், கேஷவ் மகராஜ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர், தனது முதல் இன்னிங்ஸை துவக்கிய தென்னாப்பிரிக்க அணி, 2ம் நாள் ஆட்டநேர முடிவில், 4 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. பாகிஸ்தானைவிட, முதல் இன்னிங்ஸில் 166 ரன்கள் பின்தங்கியுள்ளது.