பிரயாக்ராஜ்

துவரை திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளாவை முன்னிட்டு 29 கோடிக்கும்  மேற்பட்டோர் புனித நீராடி உள்ளனர்.

கடந்த 13-ந்தேதி தொடங்கிய  உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது.

இதையொட்டி 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

இதுவரை சுமார் 29 கோடிக்கும் மேற்பட்டோர் கும்பமேளாவிற்கு வருகை தந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இந்த முறை மகா கும்பமேளாவுக்கு சுமார் 45 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.