சிகார்

நேற்று இரவு ராஜஸ்தான் மாநிலத்தில் லேசான ந்லநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு 11.47 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டதில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.