சென்னை

சென்னை வானிலை மையம் அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 4-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்து இருந்தது.

தற்போது தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, மதுரை, தேனி, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.