புதுடெல்லி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் தாய் கல்பகம் யெச்சூரி காலமானார்.

முதுமையின் காரணமாக குரு கிராமத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கல்பகம் யெச்சூரி, சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு 89 வயது.
இதுகுறித்து சிபிஐ (எம்) வெளியிட்டு டிவிட்டர் பதிவில், தோழர் சீதாராம் யெச்சூரியின் தாயார் கல்பகம் யெச்சூரியின் மறைவுக்கு சிபிஐ (எம்) ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது. தோழர் யெச்சூரி மற்றும் குடும்பத்தினருக்குக் கட்சி இரங்கல் தெரிவிக்கிறது. அவளுக்கு 89 வயது மற்றும் அசாதாரண சைகையில் மருத்துவ ஆராய்ச்சிக்காகத் தனது உடலை தானம் செய்ய முடிவு செய்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel