சென்னை

பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு சிறுவன் மற்றும் கல்லூரி மாணவரை தாக்கி தலைமறைவாகி உள்ளனர்.

பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் உள்ளிட்ட 4 பேர், மது போதையில் கல்லூரி மாணவர் மற்றும் சிறுவன் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். தாக்குதலில் காயமடைந்தவவர்கள் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாடகர் மனோவின் மகன்களான சாஹீர், ரபிக் அவர்களின் நண்பர்களான விக்னேஷ் மற்றும் தர்மா ஆகியோர் மீது வளசரவாக்கம் காவல்துறையினர் கொலை மிரட்டல், தாக்குதல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மனோவின் மகன்கள் சாஹீர், ரபிக் ஆகியோர் தலைமறைவாக உள்ளதாக காவல்துறயினர் தெரிவித்துள்ளனர். அவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் விக்னேஷ் மற்றும் தர்மா ஆகியோர் போலீசார் கைது செய்ய்பட்டு விசாரணை நடந்து வருகிறது.