ஜூன் 9 ஆம் தேதி கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 88 கடல் மைல் தொலைவில் தீப்பிடித்த சிங்கப்பூர் கொடி கொண்ட கப்பலான எம்.வி. வான் ஹை 503, எரியக்கூடிய திடப்பொருட்கள் மற்றும் திரவங்களை ஏற்றிச் செல்கிறது என்பதை அதன் சரக்கு அறிக்கை காட்டுகின்றன,
சரக்கு அறிக்கைகளின்படி, கப்பலில் அபாயகரமான பொருட்களுடன் 157 கொள்கலன்கள் உள்ளன. அவை சர்வதேச கடல்சார் அமைப்பால் வகைப்படுத்தப்பட்ட வகுப்பு 3, வகுப்பு 4.1, வகுப்பு 4.2 மற்றும் வகுப்பு 6.1 ஆகியவற்றைச் சேர்ந்த அபாயகரமான பொருட்கள் என்றும் அவை மனித ஆரோகியதுக்கு கேடு விளைவிக்கக்கூடியது என்றும் கூறப்படுகிறது.

கொள்கலன்களில் எரியக்கூடிய பிசின் கரைசல், சுற்றுச்சூழல் ரீதியாக அபாயங்கரமான பென்சோபீனோன், ஆல்கஹால் கொண்ட நைட்ரோ செல்லுலோஸ், எரியக்கூடிய அச்சிடும் மை போன்றவை உள்ளன. மேலும், இது 2,000 டன் கடல் எண்ணெயையும் 240 டன் டீசலையும் கொண்டுள்ளது என்று பட்டியல் காட்டுகிறது.
கப்பலில் உள்ள தீயணைப்பு மண்டலத்திற்கு அருகில் அமைந்துள்ள தொட்டிகளில் தோராயமாக 2,000 டன் எரிபொருள் எண்ணெயும் 240 டன் டீசலும் இருப்பது இயக்கத்தின் ஆபத்தை அதிகரிக்கிறது.
அரசாங்க அமைப்புகளால் தயாரிக்கப்பட்ட சூழ்நிலை அறிக்கையின்படி, கப்பல் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆளில்லாமல் தத்தளித்து வருகிறது, அதே நேரத்தில் கோழிக்கோட்டில் தீப்பிடித்த சிங்கப்பூர் கொடியுடன் கூடிய கப்பலான எம்வி வான் ஹை 503. பேஸ் 2 மற்றும் 3 (போர்ட் மற்றும் ஸ்டார்போர்டு) இலிருந்து புகை மற்றும் தீப்பிழம்புகளை தொடர்ந்து வெளியிடுகிறது.
கப்பல் தெற்கு திசையில் சுமார் 10 கடல் மைல் தொலைவில் நகர்ந்து கொண்டிருக்கிறது, இதனால் வெடிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்திய கடற்கரையிலிருந்து கப்பல் நகர்வதைத் தடுப்பது உடனடி கவலையாக உள்ளது. மேலும், தீயின் அளவைக் கருத்தில் கொண்டு, இழுவைக் கோட்டை இணைப்பது மிகவும் சவாலானதாக இருக்கும். மாற்று வழிகள் குறித்து இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை பரிசீலித்து வருகிறது.
இதேபோல், கடலோர காவல்படை விமானம் தென்கிழக்கு திசையில் சுமார் 10-15 கொள்கலன்கள் மிதப்பதைக் கண்டுள்ளது. மிதக்கும் வேகம் 1-1.5 கடல் மைல் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவை மிதிக்காமல் இருந்தால், ஜூன் 12 ஆம் தேதிக்குள் கரையை அடையக்கூடும்.
கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், மிதக்கும் முன்னறிவிப்பு வரைபடத்தை உருவாக்கி, கடலோர மாவட்ட நிர்வாகங்களுடன் எச்சரிக்கைகளைப் பகிர்ந்து கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது.