கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் புதிய படமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேல்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ , ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களை தொடர்ந்து மீண்டும் இக்கூட்டணி இணைகிறது .

இந்தக் கூட்டணி தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வேல்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது சிம்பு நடிப்பில் உருவாகும் 47-வது படமாக உருவாகவுள்ளது.

தற்போது இணைந்துள்ள படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா 2’ ஆக இருக்குமா என்பது தொடர்பாகப் படக்குழு அறிவிக்கவில்லை.

இந்நிலையில் இந்த கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக கௌதம் மேனன் தனது ட்விட்டர் தளத்தில் உறுதி செய்துள்ளார். மீண்டும் சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான், மற்றும் கௌதம் மேனன் இணைந்து உள்ளதை அடுத்து விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற ஒரு சூப்பர் ஹிட் படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.