பெங்களூரு

ர்நாடக முதல்வர் சித்தராமையா தேவையின்றி தமிழகம் மேகதாது திட்டத்தை எதிர்ப்பதாகக் கூறி உள்ளார்.

கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் நீண்ட காலமாகப் பிரச்சினை இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக வறட்சி காலத்தில் காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் பிரச்சினை ஏற்படுகிறது. கர்நாடகத்தில் இந்த ஆண்டு போதிய மழை பெய்யவில்லை.

காவிரி படுகையில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), ஹாரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகள் நிரம்பவில்லை.  ஆனால் கபினி அணை மட்டும் நிரம்பியது.  தமிழக அர்சு காவிரியில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்திற்கான பங்கைக் கர்நாடகா திறந்துவிட உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

காவிரி நதிநீர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

அவர்

“மத்திய அரசு காவிரி நதிநீர் பிரச்சனையில் தலையிட வேண்டும்.  தற்போது மழை பற்றாக்குறையால்  நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. தமிழகம் மேகதாது திட்டத்தைத் தேவையின்றி எதிர்க்கிறது”

என்று கூறி உள்ளார்.