நாக்பூர்
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பல பகுதிகளில் கடும் வன்முறை ஏற்பட்டு 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்றுள அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வலியுறுத்தி நாக்பூர் மகால் பகுதியில் உள்ள சத்ரபதி சிவாஜி சிலை அருகே பஜ்ரங் தள உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை எரித்ததாக வதந்திகள் பரவி இதுகுறித்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியது.
முஸ்லிம்கள் இடையே இது சீற்றத்தை ஏற்படுத்தியயதால் மகால், கோட்வாலி, கணெஷ்பேத் மற்றும் சிதான்விஸ் பூங்கா உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் கூடி போராட்டம் நடத்தினர். குறிப்பாக சிட்னி பூங்கா மற்றும் மகால் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென வன்முறையில் இறங்கினர்.
மேலும் அவர்கள் பாதுகாப்புக்கு வந்த போலீசார் மீது கற்களை வீசினர். வாகனங்களுக்கு தீ வைத்ததால் அந்தப்பகுதியில் வன்முறை மேலும் அதிகரித்தது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலவரத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைத்தனர். இதில் 4 பேர் காயம் அடைந்தனர்.
கோட்வாலி மற்றும் கணேஷ்பேத் பகுதியிலிம் வன்முறை ஏற்பட்டதால் நாக்பூரில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பஜ்ரங் தள நிர்வாகிகள் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். தங்கள் ஆர்ப்பாட்டத்தில் அவுரங்கசீப்பின் உருவ பொம்மையை மட்டுமே எரித்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.