சென்னை

முன்னாள் அமைசர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 57 ஆம் முறையாக நீட்டிக்கபட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  த்னக்கு ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தன.

இதைத் தொடர்ந்து ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். தற்போது அந்த மனு நிலுவையில் இருந்து வருகிறது. இன்றுடன் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததை அடுத்து அவர் காணொளி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்றக் காவலை வரும் 3-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

தற்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 57-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் சிட்டி யூனியன் வங்கியின் கரூர் கிளையின் தலைமை மேலாளராக பணியாற்றிய ஹரிஷ்குமார் ஆஜராகததால் இன்று இத வழக்கில் குறுக்கு விசாரணை நடைபெறவில்லை,