சென்னை

விஜய்யால் பரந்தூரில்  எவ்வித தாக்கத்தையும்  ஏற்படுத்த முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெஇவித்துள்ளார்.

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 900 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவிக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் காவல்துறையிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

இன்று (திங்கட்கிழமை) போராட்டகுழுவினரையும், கிராம மக்களையும் சந்திக்கலாம் என தமிழக வெற்றிக் கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததன்படி பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான போராட்டக் குழுவினர் மற்றும் பொதுமக்களை த.வெ.க தலைவர் விஜய் சந்தித்து பேசி உள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம,

“பரந்தூர் செல்லும் த.வெ.க. தலைவர் விஜயால் அங்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. போராட்டக் குழுவினரின் கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரையாக கூறலாம் .நானும் மூன்றரை வருடங்களாக பரந்தூர் சென்று மக்களை சந்தித்து வருகிறேன்”

என்று தெரிவித்துள்ளார்.