க்னோ

நேற்று பாஜக வெளியிட்டுள்ள பட்டியலின்படி உத்தரப்பிரதேசத்தில் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேர்தல் வாய்ப்பு அளிக்கப்படவில்லை

நேற்றி உத்தரப்பிரதேசத்தில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களின் 2-ஆவது பட்டியலைக் கட்சி மேலிடம் வெளியிட்டது. இந்தப் பட்டியலில் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.

அலகாபாத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்  ரீட்டா பகுகுணா ஜோஷிக்கு பட்டியலில் இடம் இல்லை.  மாறாக அங்கு முன்னாள் ஆளுநர் கேசரிநாத் திரிபாதியின் மகன் நீரஜுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும் புல்பூர் தொகுதியில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்  கேசரி தேவி பட்டேலுக்குப் பதிலாக, சட்டமன்ற உறுப்பினர் பிரவீன் படே . நிறுத்தப்பட்டு இருக்கிறார்.

பல்லியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வீரேந்திர சிங் மஸ்துக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அங்கு முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகனும், மாநிலங்களவை உறுப்பினருமான நீரஜ் சேகர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.