தானே

காராஷ்டிர மாநிலத்தில் சிவாஜி சிலை உடைந்ததையொட்டி சிலையை வடித்த சிற்பி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் ராஜ்கோட் கோட்டையில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.  இந்த சிலை  நிறுவப்பட்டு 8 மாதங்களே ஆன நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி சிலை இடிந்து விழுந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து மத்திய, மாநில அரசுகள் மீது எதிர்க்கட்சிகள் சரமாரியாகக் குற்றம் சாட்டின. சிலை உடைந்த சம்பவம் தொடர்பாக சிந்துதுர்க்கில் உள்ள மால்வன் போலீஸ் நிலையத்தில் சிற்பி ஜெய்தீப்,  கட்டிட பொறியாளர் சேதன் பட்டீல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து இருவரும் தலைமறைவானார்கள்.

கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த சிலையை வடிவமைத்த கட்டிட பொறியாளர் சேதன் பட்டீல் என்பவரை காவல்துறையினர் கடந்த மாதம் 31ம் தேதி கைது செய்து சிலையை வடிவமைத்த சிற்பியை போலீசார் தேடி வந்தனர்.

காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த சிற்பி ஜெய்தீப் ஆப்தே இன்று தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தானேவில் இருந்து சிந்துதுர்க்கு அழைத்து செல்லப்படும் ஜெய்தீப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று சிந்துதுர்க் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.