சென்னை: கொரோனா தொற்று காரணமாக கடந்த  10 மாதங்களாக மூடப்பட்டுள்ள பள்ளிகள் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் அதைத் தொடர்ந்து  50% பாடங்கள் குறைப்புடன் 6,7,8 ஆம் வகுப்புகளுக்கும் விரைவில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘கொரோனா பொதுமுடக்கம்  காரணமாக கடந்த பல மாதங்களாக மூடப்பட்டுக் கிடந்த கல்வி நிறுவனங்கள், தளர்வுகள் காரணமாக படிப்படியாக மீண்டும் திறக்கப்பட்டு வருகிறது.  பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு, கடந்த ஆண்டு டிசம்பரில் இறுதியாண்டு மாணவர்களுக்காக கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், ஜனவரி முதல் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. தொடர்ந்து பிப்ரவரி 8ந்தேதி முதல் 9, 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில்,  ல் 6,7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 6, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

2020 – 21 ஆம் கல்வி ஆண்டிற்கான மூன்று பருவத்திற்கும் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.  இதனால் விரைவில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் அறிவிக்கும் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.