சென்னை: ஆகஸ்டு 15ந்தேதி அன்று நடைபெறும் சுதந்திர விழாவின் போது, பள்ளிகளில் பிளாஸ்டிக் தேசிய கொடிகளை பயன்படுத்தக்கூடாது: பள்ளி கல்வித்துறை  அனைத்து கல்வி நிலையங்களுக்கும் அறிவுறுத்தி உள்ளது.

சுதந்திர விழாவின் போது, பள்ளிகளில் பிளாஸ்டிக் தேசிய கொடிகளை பயன்படுத்தக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குனரகம், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

நாட்டின் சுதந்திர தின விழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அனைத்து விதமான பள்ளிகளிலும் சிறந்த முறையில் சுதந்திர தினவிழாவை மகிழ்ச்சியும், எழுச்சியும் மிக்க நிகழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.

பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலா்களால் அலங்காரம் செய்து தேசியக்கொடி ஏற்றி விழாவை நடத்த வேண்டும்.

இதுதவிர ஊராட்சி மன்ற நிா்வாகிகள், பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினா்கள், புரவலா்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஆகியோரை அழைத்து விழாவில் பங்குபெற செய்ய வேண்டும்.

நெகிழி வகை தேசியக் கொடிகளைப் பயன்படுத்தக்கூடாது.

அதேபோல், தேசியக் கொடியை தலைக்கீழாக அல்லது கிழிந்த கொடிகளை ஏற்றக் கூடாது.

இதுசாா்ந்து பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.