சென்னை: தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அரையாண்டு விடுமுறை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில், 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 15ந்தேதி முதல் அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கியுள்ளன. தற்போது, மாணவர்களுக்கு காலை 9.45 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன. அனைத்து வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுகளும் வரும் டிச.23-ஆம் தேதியுடன் முடிவடைகின்றன.
அரையாண்டுத் தேர்வுகள் முடிவடைவதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை பள்ளிக்கல்வித் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 24-ம் தேதி முதல், 2026 ஜனவரி 1-ம் தேதி வரை, பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அரையாண்டு விடுமுறை முடிந்து, ஜனவரி 4-ந்தேதி வரை 12 நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து ஜனவரி 5-ந்தேதி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
[youtube-feed feed=1]