டெல்லி

ன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அமர்வில் நீட் தேர்வு மனுக்கள் விசாரிக்கப்பட உள்ளன.

கடந்த மே 5 ஆம் தேதி நடந்த இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள், கடந்த ஜூன் 4-ம் தேதி வெளியிடப்பட்டன. அதில் 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.  மேலும் வினாத்தாள் கசிவு, வினாத்தாள் விற்பனை, 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது போன்ற முறைகேடுகளும் நடந்ததாக பேசப்பட்டது.

ஆகவே, நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள், பெற்றோர் என பலதரப்பினரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று பதில் மனு தாக்கல் செய்துள்ளன.

இன்று நீட் தேர்வு தொடர்பான 38 மனுக்களும் உச்சநீதிமன்றத்தில்ல் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வருகின்றன. இந்த் தகவல் உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது.