டெல்லி

ச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகஉள்ள டி.ஓய்.சந்திரசூட் வரும் நவம்பர் 10 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யுமாறு, அவருக்கு கடந்த வாரம் மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் அனுப்பியது. ,தனக்கு அடுத்ததாக தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை சந்திரசூட் பரிந்துரை செய்து இருந்தார்.

இதையொட்டி உச்சநிதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இவர்,சந்திரசூட் ஓய்வு பெறும் மறுநாள் அதாவது நவம்பர்,11 ஆம் தேதி அன்று பதவியேற்க உள்ளார்.

சஞ்சீவ் கண்ணா 1960ம் ஆண்டு மே 14 ஆம் தேதி டெல்லியில் பிறந்து டெல்லி பல்கலையில் சட்டம் பயின்றார். இவருடைய தந்தை டெல்லி ஐகோர்ட்டின் நீதிபதியாக 1985ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். இவரது தாயார் சரோஜ் கண்ணா டெல்லி ஸ்ரீ ராம் கல்லூரியில் இந்தி பேராசிரியராக பணியாற்றினார்.

கடந்த 1983 ஆம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட சஞ்சீவ் கண்ணா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார்.  கடந்த 2004ம் ஆண்டு டெல்லி அரசின் வழக்கறிஞராகவும் (சிவில்) நியமிக்கப்பட்டார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2005ம் ஆண்டு சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டார். கடந்த 14 ஆண்டுகளாக பல்வேறு உயர்நீதிமன்றங்களில் இவர் நீதிபதியாக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.