சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சம்பந்தியும், மருமகன் சபரிசனின் தந்தையுமான வேதமூர்த்தி (வயது81) சென்னையில் இன்று காலமானார்.

முதலமைச்சரின் சம்பந்தியும், சபரீசனின் தந்தையுமான வேதமூர்த்தி  உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நள்ளிரவு 1மணி அளவில் காலமானார். அவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக கூறப்படுகிறது.  தற்போது வேதமூர்த்தி அவர்களின் உடல் அஞ்சலிக்காக  மதியம் 12மணி முதல் கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட உள்ளது.

இறுதி சடங்கு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.