சென்னை:  ரூட்டு தல உள்பட மாணவர்களியே ஏற்படும் பல்வேறு ஈகோ காரணமாக, ஏற்படும் மோதலை தடுக்கும் வகையில் சென்னை மாநகர காவல்துறை புதிய வியூகத்தை வகுத்துள்ளது.

அதன்படி, தகராறு செய்யும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களின் பெற்றோரிடம் தெரிவிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்துகளில் கானா பாடல்கள் பாடியும், சாகசம் என்ற பெயரில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடியும் ஆபத்தான பயணம் செய்கின்றனர். மேலும், பேருந்து மற்றும் ரயில் வழித்தடங்களில் ‘ரூட் தல’ என்ற பெயரில் வன்முறை, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர். பல இடங்களில் ஒருவருக்கொருவர் கத்தி அரிவாள்களைக் கொண்டு மோதலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாணவர்களை கட்டுப்டுத்த வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் ஏராளமான புகார்கள் கூறப்பட்டுள்ளன. கடுமையதான நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களை கல்லூரியில் இருந்து நீரந்தரமாக நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் மாணவர்களின் எதிர்காலம் கருதி காவல்துறை மாணவர்கள் மீது    அவ்வப்போது காவல் துறை  நடவடிக்கையும் எடுத்து வருகிறது. அப்போது கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்படுவதுடன் அவர்களிடம் இருந்து மன்னிப்பு கடிதங்களும் பெறப்படுகின்றன.   இருப்பினும் மாணவர்கள் தொடர்ந்து அடிதடி, மோதல், தகராறு போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில்,  கடந்த இரு நாட்களுக்கு முன்பு,   சென்னை அண்ணா சாலையில் ஆனந்த் திரையரங்கு பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த நந்தனம் கல்லூரி மாணவர்கள், அவ்வழியாக வந்த மாநகர பேருந்தில் பயணித்த புதுக் கல்லூரி மாணவரை தாக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது, டிரைவர் பேருந்தை விரைவாக செலுத்தியதால், மோதல் தடுக்கப்பட்டது. இருந்தாலும் சில மாணவர்கள்   பேருந்தை நோக்கி கற்களை வீசினர்.

இந்த சம்பவத்தின்போது, மாணவர்களின் கல்வீச்சில், சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் கண்ணாடி உடைந்தது. மேலும் சாலையோரம் நின்றிருந்த மக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக அந்தக் காரின் உரிமையாளர் ராஜா, ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், நந்தனம் கல்லூரி மாணவர்கள் 4 பேரை  கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கும் வகையில் தகராறு செய்யும் மாணவர்களை கண்டறிந்து பெற்றோரிடம் அவர்களைப் பற்றிய விவரங்களை தெரிவிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்