ரஷ்யாவின் கசான் நகரில் அடுத்த வாரம் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பாலஸ்தீன அதிகாரசபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸை அழைத்துள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான மோதலில் இரு நாடுகளின் தீர்வுக்கு ரஷ்யாவின் ஆதரவை புடின் மீண்டும் உறுதிப்படுத்தினார் மற்றும் அடுத்த வார உச்சிமாநாட்டில் இந்த பிரச்சினை விவாதிக்கப்படும் என்று கூறினார்.

பிரிக்ஸ் குழுவானது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்காவைத் தவிர எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கியதாக விரிவடைந்துள்ளது.

முன்னதாக ஆகஸ்ட் மாதம், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், பாலஸ்தீனிய அதிகாரசபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸிடம், பாலஸ்தீன மக்களின் துன்பங்களால் மாஸ்கோ துயரத்தில் இருப்பதாகவும், முழுமையான சுதந்திர அரசை நிறுவுவதற்கான அவர்களின் இலக்கை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.

உக்ரேனுடனான மோதலுக்கு மத்தியிலும் மத்திய கிழக்கில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்களை ரஷ்யா கண்காணித்து வருவதாக புடின் கூறினார்.

பாலஸ்தீனம் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ரஷ்யா தீவிரமாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்ட ரஷ்ய அதிபர் புடின் மத்திய கிழக்கு நாடுகளில் நிலையான அமைதி ஏற்பட ரஷ்யா என்றும் பாலஸ்த்தீனத்துடன் துணை நிற்கும் என்று தெரிவித்தார்.