சென்னை; தமிழ்நாடு பதிவுத்துறையில், இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ரூ.274.41 கோடி வருமானம்கிடைத்துள்ளது. இது வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது.

ஆவணி மாதம் சுபமுகூர்த்த தினமான நேற்று( 04.09.2025) வியாழக்கிழமை  சார்பதிவாளர் அலுவலகங்களில்,  பதிவர்களின் வசதிகளுக்காக, கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

படி,  வழக்கமாக வழங்கப்படும் டோக்கன்களுடன் கூடுதலாக டோக்கன்கள் வழங்கப்பட்டதுடன், பணி நேரம் முடிந்தும், பதிவு செய்யும் பணி நடைபெற்றது. இதன்மூலம் மூலம் பதிவுத்துறை வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ஒரே நாளில் ரூ.274.41 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இது குறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,” பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஆவணி மாதம் சுபமுகூர்த்த தினமான நேற்று ( 04.09.2025) வியாழக்கிழமை கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதன் மூலம், பதிவுத்துறை வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவில் நிகழும் 2025-26 ம் நிதியாண்டில், ஒரே நாளில் அரசுக்கு ரூ.274.41 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதற்கு முன்னதாக , இதே 2025-26 ம் நிதியாண்டில், கடந்த 30.04.2025 அன்று பதிவுத்துறையில் ஒரே நாளில் அரசுக்கு ரூ.272.32 கோடி வருவாய் ஈட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.