டில்லி:

பங்குசந்தை முகவர் வீட்டில் கட்டுகட்டாக ரூ.11 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

டில்லியை தலைமையிடமாக கொண்டு ஓ.பி.ஜி. குரூப் என்ற நிறுவனம் தேசிய பங்குச்ந்தை மூலம் பங்கு பரிவர்தத்னை மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனத்தின் கிளைகள் மும்பை, பெங்களூரூ, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் உள்ளன.

இந்நிலையில் இன்று இந்நிறுவனத்துடன் தொடர்புடைய முகவர் சஞ்சய்குப்தா என்பவரிடம் கணக்கில் வராத பணம் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அட்டை பெட்டிகளில் மறைத்து வைத்திருந்த ரூ. 11 கோடி, வெளிநாட்டு முதலீடுகள், வங்கி கணக்கு ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

[youtube-feed feed=1]