டெல்லியைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரியான ரவீந்திர நாத் சோனி, இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் முதலீட்டாளர்களை ஏமாற்றி சுமார் 1,000 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

2021-ல் தொடங்கிய ப்ளூசிப் குழுமம் மூலம் தங்கம், எண்ணெய், உலோகங்களில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி, இந்தியா, துபாய், கனடா, மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் பணம் பெற்றதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

முதலில சில காலம் வட்டி கொடுத்து நம்பிக்கை பெற்ற நிறுவனம், பின்னர் திடீரென பணம் செலுத்துவதை நிறுத்தி அலுவலகங்களை மூடியது.

மோசடி வெளியான பிறகு துபாயில் பயணத் தடை விதிக்கப்பட்ட சோனி, ஓமன் வழியாக இந்தியாவுக்கு தப்பி வந்தார். ஒரு வருடம் தலைமறைவாக இருந்த அவரை, டேராடூனில் உணவு ஆர்டர் செய்ததை வைத்து போலீசார் கைது செய்தனர்.

இதுவரை பல மாநிலங்களில் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் ரூ.29 கோடி மதிப்புள்ள சொத்துகள் மற்றும் 33 வங்கி கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

[youtube-feed feed=1]