தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான ஃபெப்சியில் 25000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். ஃபெப்சி அமைப்புக்கு மூன்று ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெற்று வருகிறது.

தற்போது ஃபெப்சி தலைவராக ஆர்கே செல்வமணி உள்ளார். பொது செயலாளராக அங்கமுத்து ஷண்முகம் உள்ளார். இவருடைய பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில் 2021 – 2023ஆம் ஆண்டுக்கான ஃபெப்சி தேர்தல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

“திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு (ஃபெப்சி) பிப்ரவரி 14-ஆம் தேதி, தேர்தல் நடைபெறும். இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் பிப்ரவரி 7- ஆம் தேதி வெளியிடப்படும் என்று அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

மேலும் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் என 13 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறும். 23 சங்கங்களின் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் என 69 பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள்.

கொரோனா ஊரடங்கு நிதியாக ரூபாய் 3.93 கோடியைத் திரை நட்சத்திரங்கள் அளித்துள்ளனர்” என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் .