ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதற்கான ப்ரீ வெட்டிங் ஈவென்ட்டுகள் உலகளவில் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொள்ள கடந்த சில மாதங்களுக்கு முன் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து சொகுசு கப்பலில் இரு குடும்பங்களின் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்ட மற்றொரு கொண்டாட்டம் இடம்பெற்றது.

தற்போது ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்துக்கு முன் மற்றொரு சுற்று கொண்டாட்டத்தில் ஈடுபட அம்பானி குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக மும்பையில் பரபரப்பு கிளம்பியுள்ளது.

பல மாதங்களாக நடைபெற்று வரும் அம்பானி வீட்டு திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, முகேஷ் மற்றும் நீதா அம்பானி ஆகியோர், ஜூலை 2 ஆம் தேதி, பால்கரில் உள்ள சுவாமி விவேகானந்த் வித்யாமந்திரில் ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த திருமண அழைப்பிதழ் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, இந்த நிகழ்ச்சி மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் (BKC) உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெற உள்ளது.