அமெரிக்கா உடனான தங்கள் நாட்டின் உறவு முடிவுக்கு வந்துவிட்டதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

கனடா தேர்தலில் நான்காவது முறையாக வெற்றிபெற்றுள்ள லிபரல் கட்சி சார்பில் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மார்க் கார்னி அமெரிக்காவின் துரோகத்தினால் நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

கனடா தற்போது வரலாற்றின் மிக முக்கியமான தருணத்தில் உள்ளது, அமெரிக்காவுடான எங்களின் பழைய உறவு முடிவிற்கு வந்துவிட்டது, அமெரிக்கா எங்கள் வளங்களை நாட்டை தனதாக்கிக்கொள்ள முயல்கின்றது, இது மிகவும் வேதனையான நிகழ்வு என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி எங்களை சிதைக்கப்பார்க்கின்றார் அதன் மூலம் அமெரிக்கா எங்களை உரிமையாக்கலாம் என அவர் கருதுகின்றார் என தெரிவித்துள்ள மார்க் கார்னி, இது ஒருபோதும் நடக்காது எனவும் இரண்டு இறையாண்மையுள்ள நாடுகளின் எதிர்காலம் குறித்து நான் விரைவில் அமெரிக்க ஜனாதிபதியுடன் பேசுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், உலகிற்கான தலைமைத்துவத்தின் முன்னணியில் இருப்பதற்கு அமெரிக்கா விரும்பாவிட்டால் கனடா அதனை ஏற்கும், வல்லரசாக மாறுவோம் என கனடாவின் புதிய பிரதமர் கார்னி கூறியுள்ளார்.