டெல்லி

ந்திய ரிசர்வ் வங்கியிடம் திரும்ப அளிக்கப்பட்ட ரூ.2000 நோட்டுகள் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளது,

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2023, மே 19ம் தேதி, 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக அறிவித்தபோது, 3.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.  அவற்றை வங்கிகள் மூலம் ரிசர்வ் வங்கி திரும்ப பெற்ற்ள்ளது

இன்று, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”ரூ.2,000 நோட்டுகள் 98.26 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளன. மே 19 2023ல் இருந்து ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.ஜூன் 2, 2025 நிலவரப்படி ரூ.6,181 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. ரூ.2,000 நோட்டுகள் சட்டப்படி செல்லும்.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் எழுச்சி இருந்தபோதிலும் ரூபாய் நோட்டுகளுக்கான தேவை இன்னும் இருந்துகொண்டு தான் இருக்கிறது. மொத்த நாணய மதிப்பில் 86 சதவிகிதமும், மொத்த அளவில் 40.9 சதவீதம் பங்களிப்பும் கொண்டு ரூ.500 நோட்டு ஆதிக்கம் செலுத்துகிறது. கள்ளநோட்டை எதிர்த்துப் போராட புதிய தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் ரிசர்வ் வங்கி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.