ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் ராமேஸ்வரம் மீனவர்களின் படகு கடலில் மூழ்கியது. அதில்இருந்த 4 மீனவர்கள் கடலில் விழுந்தனர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகின்றது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகில் மோதியதில் விசைப்படகு கடலில் மூழ்கியது. அதில் இருந்த நான்கு மீனவர்கள் கடலில் விழுந்த நிலையில், அவர்கள்  மாயமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியது. படகில் இருந்த மீனவர்கள் தற்போது வரை கரை திரும்பவில்லை என அவர்களது உறவினர்கள் புகார் தெரிவித்திருந்தனர். மீனவர்கள் படகு மீது இலங்கை கடற்படை தங்களது கப்பலை மோதவிட்டதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

இதில் ஒருவர் மீனவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.