ஜெய்ப்பூர்

ராஜஸ்தானில் பாஜக தோல்வி அடைந்ததால் அம்மாநில் அமைச்சர்  கிரோடி லால் மீனா ராஜினாமா செய்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான கிரோடி லால் மீனா அம்மாநில வேளாண்மை, தோட்டக்கலை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்து வந்தார்.   இவர் இரண்டு முறை எம்.பி.யாகவும், 5 முறை  எம்.எல்.ஏ-வாகவும் இருந்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, தனது பொறுப்பில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியை பாஜக இழந்தால்,  அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என தெரிவித்திருந்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் 25 தொகுதியில் பாஜக 14 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

காங்கிரஸ் கூட்டணி 8 இடங்களில் வெற்றி பெற்றது. அமைச்சர் கிரோடி லால் மீனா பிரச்சாரம் செய்த 7 தொகுதிகளில் 4-ல் பாஜக தோல்வி அடைந்தது. எஅவே தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே அவர் தனது அமைச்சர் அலுவலகத்திற்கு வராமல் இருந்தார்.  தற்போது கிரோடி லால் மீனா தனது அமைச்சர் பதவியை  ராஜினாமா செய்துள்ளார்.