ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாத்துக்கு அரசு மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாத் கடந்த 2018 ஆம் ஆண்டு பதவியில் உள்ளார்.  காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க மத்திய ஆளும் கட்சியான பாஜக எவ்வளவோ முயற்சி செய்தும் நடைபெறாமல் உள்ளது.

அசோக் கெலாத் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அப்போது முதல் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது.  இந்நிலையில் நேற்று அவருக்கு கடும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.  அதையடுத்து அவர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அங்கு சி டி ஸ்கேன் சோதனை நடந்துள்ளது.

சி டி ஸ்கேன் சோதனைக்குப் பிறகு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.   அதன்படி அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது.  தற்போது அவர் உடல் சீராக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.