சென்னை

சென்னை வானிஅ ஆய்வுமையம் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்துக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்

”தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்ய தொடங்கி இருக்கிறது. கடந்த 3-ந்தேதி முதல் 2-வது சுற்று கோடை மழை பெய்து வரும் சூழலில், இடையில் சிறிய இடைவெளிவிட்டு, பின்னர் 3-வது சுற்று கோடை மழை தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட இருக்கிறது.

அதன்படி, தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்று சுழற்சி ஒன்று உருவாகி உள்ளது. இது மிக மெதுவாக நகர்ந்து தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் (அதாவது நாளை இரவுக்குள்) குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாக வாய்ப்பு ள்ளதால் தமிழ்கத்தில் நாளை (8-ந்தேதி) முதல் மேலும் ஒரு வாரத்துக்கு மழை தொடரக்கூடும்

ஏற்கனவே கோடை மழை தொடங்கியதில் இருந்து இதுவரை 188 சதவீதம் இயல்பைவிட அதிகமாகவே தமிழகத்தில் பெய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக மழை இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுவதால், மழை அளவு மேலும் அதிகரிக்கும்.”

என அறிவித்துள்ளது.