சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழை பெய்யலாம் எனத் தெரிவித்துள்ளது

தற்போது தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

தற்போது தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவத் சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், தஞ்சாவூர், மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.