சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என தெரிவித்துள்ளது


இன்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”தற்போது தென் தமிழக பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது..

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளது.

அதாவது, நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்”

என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.