ராமேஸ்வரம்

ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் ரயில் பாலம் 100% தயார் நிலையில் உள்ளதாக தெர்கு ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் கடந்து செல்லும்போது திறந்து மூடும் வகையில் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான தூக்குப்பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த பால பணிகள் முடிவடைந்துவிடடதையடுத்து ரயில்வே அதிகாரிகள், பாம்பம் புதிய ரயில் பாலத்தை பல்வேறு கட்டங்களாக ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி புதிய பாலத்தில் இன்று ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு பின் தெற்கு  அதிகாரி சீனிவாசன் செய்தியாளர்களிடம் ,

“பாம்பன் கடலில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரெயில் பாலம் 100 சதவீதம் தயாராக உள்ளது. பழைய பாலத்தைப் போலவே புதிய ரயில் பாலமும் 100 ஆண்டை கடந்தும் நிற்கும். பாலத்தில் 75 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனத் தெரிவித்துள்ளார்.