டெல்லி: பஞ்சாப் உள்பட வெள்ளம் பாதித்தமாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண நிதி வழங்குங்கள் என மத்தியஅரசுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.

சமீப காலமாக பஞ்சாப், உள்பட வட மாநிலங்கள் மேகவெடிப்பு போன்ற இயற்கை சீற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட உள்ளன. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டும் ஏராளமானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கி உள்ளனர். தலைநகர் டெல்லியிலும், யமுனை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரையோர மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்துக்கு சிறப்பு நிவாரண நிதித் தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், பஞ்சாபில் மழை-வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீா், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்டில் நிலைமை மோசமாக உள்ளது. இத்தகைய இடா்ப்பாடான காலகட்டத்தில், பிரதமரின் கவனமும், மத்திய அரசின் தீவிர உதவிகளும் மிகவும் அவசியம். இம்மாநிலங்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள், தங்களின் உயிா், உடைமை, வீடு மற்றும் அன்புக்குரியவா்களைக் காக்க போராடி வருகின்றன. அவா்களின் இந்தப் போராட்டம் வேதனையளிக்கிறது. மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு உதவும் வகையில் சிறப்பு நிவாரண நிதித் தொகுப்பை அறிவிக்க வேண்டும். மீட்பு-நிவாரணப் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். மக்களைக் காக்க வேண்டியது அரசின் தலையாயப் பொறுப்பு என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.