மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை ஜம்மு-காஷ்மீர் செல்கிறார்.

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்தவர்களைச் சந்திப்பார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அனந்த்நாக்கில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களை அவர் பார்வையிடுவார்.

ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த சம்பவத்தில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

சம்பவம் நடந்த நேரத்தில் ராகுல் காந்தி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் தனது பயணத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு இந்தியா திரும்பினார்.

தாக்குதல் தொடர்பாக நடைபெற்ற காங்கிரஸ் காரியக் குழு கூட்டத்திலும், மத்திய அரசு ஏற்பாடு செய்த அனைத்துக் கட்சி கூட்டத்திலும் அவர் இன்று கலந்து கொண்டார்.

இந்த நிலையில் அவர் நாளை காஷ்மீர் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.