டெல்லி

மிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவை தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3-வது முறையாக ஆட்சியமைத்துள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், எம்.பி.யாக நேற்று முன்தினம் பதவியேற்று கொண்டனர். மீதமிருந்தவர்கள் நேற்று எம்.பி.க்களாக பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அரசியல் சாசன நகல் ஒன்றை கையில் பிடித்தபடி எம்.பி.யாக நேற்று பதவியேற்று கொண்டார்.

ராகுல் காந்தி நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை  ஏற்க வேண்டும் என காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் இயற்றியது. ராகுல் காந்தி இடை ஏற்று கொண்டதால் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ராகுல்காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்

ராகுல் காந்தி,

”நன்றி எனது அன்புச்சகோதரர் ஸ்டாலின் அவர்களே.. தெற்கில் இருந்து வடக்கு வரை இந்தியாவின் ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிப்பதை உறுதி செய்வோம். மேலும் நமது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவோம்

எனப் பதிவிட்டுள்ளார்.