புனே

காங்கிரஸ்  தலைவ்ர் ராகுல் காந்திக்கு வீரசாவர்க்கர் குரித்த அவதூறு வழ்க்கில் ஆஜராக புனே நீதிமன்றம் நிரந்தர விலக்கு அளித்துள்ளது.

காங்கிரச் தலைவர் ராகுல்காந்தி மீது சுதந்திரப் போராட்ட வீரரும், இந்துத்துவ சித்தாந்தவாதியுமான வி.டி. சாவர்க்கர் குறித்து ஆட்சேபகரமான கருத்துகளை தெரிவித்ததாக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. புனே நீதிமன்றத்தில் வீர சாவர்க்கரின் உறவினர் சத்யாகி சாவர்க்கர், ராகுல்காந்திக்கு எதிராக புனே கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடுத்திருந்தார்.

வழக்கு மனுவில்,

“கடந்த 2023-ம் ஆண்டு லண்டனில் பேசிய ராகுல்காந்தி, வீர சாவர்க்கர் தான் எழுதிய புத்தகம் ஒன்றில் தானும், தனது 5, 6 நண்பர்களும் சேர்ந்து முஸ்லிம் நபர் ஒருவரை அடித்தோம். அதனால் மகிழ்ச்சியாக உணர்ந்ததாக கூறியுள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை. ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு கற்பனையானது, பொய்யானது, தீங்கு விளைவிக்கக்கூடியது”

என்று கூறப்பட்டது/.

ஏற்கனவே இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டிருந்ததை எதிர்த்து சத்யாகி மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தார். அவதூறு வழக்கில் ராகுல்காந்தி சார்பில் ஆஜரான வக்கீல் மிலிந்த் பவார், கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து ராகுல்காந்திக்கு நிரந்தர விலக்குக்கோரி கடந்த மாதம் மனுதாக்கல் செய்தார்.

புனே நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி அளித்த உத்தரவில்,

“குற்றம் சாட்டப்பட்டவர் மக்களவையில் எதிர்க்கட்சித்தலைவராக உள்ளதால் அவர் மக்களவை கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும். மேலும், அவர் “இசட்-பிளஸ்” பாதுகாப்பில் உள்ளார். விசாரணையில் அவர் கலந்துகொண்டால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதை கருத்தில்கொண்டு, இந்த வழக்கில் ராகுல்காந்தி ஆஜராவதில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்கப்படுகிறது”

என்று தெரிவித்துள்ளார்.