டெல்லி

மெரிக்க அதிபர் டிரம்ப் பொய்யர் என பிரதமர் மோடி ஏன் கூறவில்லை என ராகுல் காந்தி வினா எழுப்பி உள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,

“போர் நிறுத்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பொய்யர் என பிரதமர் மோடி ஏன் கூறவில்லை?  இந்திய ராணுவம் செயல்பட முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும். இந்திரா காந்தி காலத்தில் அந்த உரிமை வழங்கப்பட்டது; ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டாம் என்ற அரசியல் விருப்பத்தை பாகிஸ்தானிடம் தெரிவித்துவிட்டனர்

இதனால், பாகிஸ்தானின் ராணுவ தளங்களை நம் ராணுவ வீரர்கள் தாக்க முற்பட்டபோது, அவர்களின் கை கட்டப்பட்டது; விமானங்களை இழந்தோம்.போர் பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் என பாகிஸ்தானிடம் ஏன் சொன்னீர்கள்..?

பஹல்காம் துயரத்தால் பிரதமரின் கைகளில் படிந்த ரத்த கறையை போக்க மட்டுமே பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்பட்டது; பிரதமர் தனது பிம்பத்தைப் பாதுகாக்க மட்டுமே இதை செய்தார்.உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவிக்காமல், பயங்கரவாதத்திற்கு மட்டுமே கண்டனம் தெரிவித்ததன் பொருள் பாகிஸ்தானுடன் இந்தியா சமன் செய்ய வேண்டும் என்பதே.

உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவிக்காமல், பயங்கரவாதத்திற்கு மட்டுமே கண்டனம் தெரிவித்தது; இதன் பொருள் இரண்டு நாடுகளையும் உலக நாடுகள் சமமாக பார்க்கின்றன என்பதையே காட்டுகிறது ; ஐக்கிய முற்போக்கு கூட்டணி காலத்தில், இது நடக்கவில்லை”

என்று உரையாற்றி உள்ளார்.