யநாடு

யநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு காங்கிரஸ் கட்சி 100 வீடுகள் கட்டி தரும் என அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்

நேற்று முன் தின கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி பார்வையிட்டார். ராகுல் காந்தி தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ராகுல்காந்தி ஆறுதல் கூறினார்.

பிறகு ராகுல்காந்தி செய்தியாளர்களிடம்,

“மிகவும் மோசமான பேரிடர் நிகழ்ந்துள்ளது. நேற்று (அதாவது நேற்று முன் தினம்) முதல் நான் இங்கு இருக்கிறேன். நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து வயநாடு மாவட்ட நிர்வாகத்தினரிடமும், பஞ்சாயத்து நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தினேன்.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் சார்பில் 100 வீடுகள் கட்டித்தரப்படும்.

இதுபோன்ற மோசமான நிலையை கேரள மாநிலம் இதுவரை கண்டதில்லை. இதனை டெல்லியிலும், இங்குள்ள முதல் மந்திரியிடமும் எழுப்புவேன். இது வேறு நிலை சோகம். இதை வேறுவிதமாக நடத்த வேண்டும்.”

என்று கூறியுள்ளார்.