விக்கிரவாண்டி

வெ க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திட்டமிட்டபடி தவெக மாநாடு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய் தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அண்மையில் பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டு கட்சிக்கான பாடலும் வெளியிடப்பட்டிருந்தது.

நடிகர் விஜய் கொடிக்கான விளக்கத்தை விரைவில் நடைபெற இருக்கும் மாநாட்டில் தெரிவிப்போம் அதுவரை கட்சியினர் கட்சிக் கொடியை முறையாக அனுமதி பெற்று ஏற்றிக் கொண்டாடுங்கள் எனத் தெரிவித்திருந்தார். வரும் 23 ஆம்ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற இருப்பதாகவும் அதற்காக பாதுகாப்பு மற்றும் அனுமதியை த.வெ.க கோரியுள்ளது.

விஜய்யின் த.வெ.க மாநாடு தேதி மாற்றம் தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஜோதிடரை அணுகியுள்ளதாகவும், மாநாட்டிற்கான தேதி இந்த மாதத்திற்குள் கிடைக்கவில்லை என்றால் ஜனவரி மாதத்திற்கு மேல் மாநாடு தள்ளிப்போகவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

மாநாட்டுக்கான அனுமதி காவல்துறையால் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு 21 கேள்விகள் கேட்டு தற்போது கடிதம் அனுப்பியுள்ளனர். விக்கிரவாண்டி காவல்துறை தமிழக வெற்றிக்கழக மாநாடு குறித்து 21 கேள்விகளை கேட்டிருந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் சட்டப்பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்

விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23 –ஆம் தேதி திட்டமிட்டபடி தமிழக வெற்றிக்கழக மாநாடு நடைபெறும் என்று பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். அதாவது வரும் 23 ஆம்  தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் என அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.