ஞ்சாவூர்

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் நாளை காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

புன்னைநல்லூர் தஞ்சையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இங்குள்ள மாரியம்மன் கோவில். தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறது. இங்கு சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

நாளைய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 3 ஆம்தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகளும், 4 ஆம் தேதி நவக்கிரக ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதியும், தொடர்ந்து, 5 ஆம் தேதி மகாலட்சுமி ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதியும், 6 ஆம் தேதி சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், பூர்ணாஹூதியும் நடைபெற்றது.

பிறகு 7 ஆம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கஜ பூஜை நடத்தப்பட்டு, மாலை திருக்குடங்கள் யாகசாலை எழுந்தருளுதல் செய்யப்பட்டு, முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து சனிக்கிழமை காலை  2 ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர், மாலை 3 ஆம் கால யாகசாலை பூஜைகள், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி நடைபெற்றுள்ளன.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 4 ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. மாலை 5-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று, திரவ்யா ஹூதி, பூர்ணாஹூதி முடிவடைந்து, தீபாராதனை நடைபெற்றுள்ளது.

நாளை திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேக பெருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்படும். நாளை இரவு மாரியம்மன் வீதி உலா நடைபெற உள்ளது.