புதுடெல்லி: பொதுத்துறை நிறுவனங்களும், தனியார் துறை நிறுவனங்களும் இணைந்து செயலாற்றுவதன் மூலமே, நாட்டின் பொருளாதாரத்தை மீட்சியடைய செய்ய இயலும் என்று கருத்து தெரிவித்துள்ளார் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா.

அவர் பேசியுள்ளதாவது, “ஓர் இந்­திய அரசு ஊழி­ய­ரின் மக­னாக வளர்ந்த நான், நம் பொதுத்­துறை நிறு­வ­னங்­களின் நிறு­வன வலிமை என்­பது மிக­வும் முக்­கி­ய­மா­னது என்று நினைக்­கி­றேன்.

அவற்றை சிறந்த நிலைக்கு எடுத்­துச் செல்வ­தில் மட்­டு­மின்றி, தொழில்­நுட்­பத்தை பயன்­ப­டுத்­து­வ­து தொடர்பாகவும் திற­மை­யான நிலைக்கு எடுத்­துச் செல்­வது குறித்து சிந்­திக்க வேண்­டும்.

நவீ­ன­ம­ய­மாக்­க­லில், பொதுத்­து­றைக்­கும் ஆத­ரவு அளிப்­பது அவ­சி­யம் என கருதுகிறேன்.

பொதுத்­துறை நிறு­வ­னங்­களும், தனி­யார் துறை நிறு­வ­னங்­களும் ஒன்று சேர்ந்து செயல்­ப­டு­வ­தன் மூலமே, பாதிக்­கப்­பட்ட பொரு­ளா­தா­ரத்தை மீட்­சி­ய­டை­யச் செய்ய முடி­யும்” என்றார் நாதெல்லா.

 

[youtube-feed feed=1]