சென்னை: தமிழகத்துக்கு மேலும் 2 வந்தே பாரத் ரெயில்களை  காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி  இன்று முற்பகல் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே  சென்ட்ரல்-மைசூரு, சென்னை சென்ட்ரல்-கோவை, சென்னை சென்ட்ரல்-விஜயவாடா, எழும்பூா்-திருநெல்வேலி, கோவை-பெங்களூரு என மொத்தம் 5  வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்,  இன்று மேலும் 2 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் தொடங்கி வைத்தார்.

சென்னை எழும்பூா்-நாகா்கோவில், மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் மற்றும் மீரட்-லக்னோ ஆகிய 3 வழித் தடங்களில் ‘வந்தே பாரத்’ ரெயில்களை பிரதமா் மோடி டெல்லியில் இருந்து இன்று (சனிக்கிழமை) காணொலி மூலம் தொடங்கி வைத்தார்

 சென்னை சென்ட்ரலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கவர்னர் ஆா்.என் ரவி, மத்திய செய்தி ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரத் துறை இணை மந்திரி எல்.முருகன் ஆகியோா்  வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.  இந்த ரெயில் தொடக்க நாளில் மட்டுமே சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் மற்ற நாட்களில் எழும்பூரில் இருந்து இயக்கப்படும்.

மதுரையில் இருந்து மத்திய ரெயில்வேதுறை இணை மந்திரி வீ.சோமண்ணா மதுரை-பெங்களூரு இடையே இயங்கும் வந்தே பாரத் ரெயிலை தொடங்கி வைத்தாா்.

இந்த ரெயில்கள் இன்று தொடங்கப்பட்டாலும் வருகிற 2-ந்தேதி முதல்தான் வழக்கமான கால அட்டவணையின்படி இயக்கப்படும். இதற்காக முன்பதிவுகளும் விரைவில் தொடங்கி உள்ளன.  இந்த ரயிலின பயண கட்டணத்தில் உணவு மற்றும் சிற்றுண்டிக்கான கட்டணங்களும் உள்ளடங்கும்.

எழும்பூா்-நாகா்கோவில் ரெயில் காலை 5 மணிக்கு புறப்படும். மறுமாா்க்கமாக இந்த ரெயில் (எண் 20628) நாகா்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும். மதுரை-பெங்களூரு ரெயில் (எண் 20671) காலை 5.15 மணிக்கு புறப்படும்.

மறுமாா்க்கமாக இந்த ரெயில் (எண் 20672) பெங்களூரில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் இரு மாா்க்கத்திலும் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமை தவிா்த்து மற்ற நாட்களில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டள்ளது.

சென்னை – நாகர்கோவில் உள்பட மூன்று வந்தே பாரத் ரயில் சேவைகளை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…