டெல்லி

ந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது சபரிமலை பயணத்தை ரத்து செய்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டகால் பாகிஸ்தான் உடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது., வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.

கடந்த 7ம்தேதி நள்ளிரவு 1.44 மணியளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் மொத்தம் 9 இடங்களில் (சகாம்ரு, முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், பிம்பர், பஹவல்பூர்) பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனால் இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால்  எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

ஜனாதிபதி திரௌபதி முர்மு மே 19ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய திட்டமிட்ருந்தார்  தற்போது இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் சபரிமலை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.