ஹொலேநர்சிப்பூர்

ஜத எம் எல் சியும் பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரருமான சூரஜ் ரேவண்ணா ஈது ஓரின சேர்க்கை புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஹாசன் தொகுதியின் முன்னாள் எம் பியும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணா  பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டது. மேலும் அவரது வீட்டு பணிப்பெண், கட்சியின் பெண் நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் அளித்த புகாரில், பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தற்போது பிரஜ்வலின் அண்ணனும் மஜத எம்எல்சியுமான சூரஜ் ரேவண்ணா (36) மீது 24 வயதான இளைஞர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். அந்த இளைஞர் கன்னட சேனலுக்கு நேற்று முன்தினம் இரவு இது குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார்

அந்த பேட்டியில்,

“ஜூன் 6-ம் தேதி ஹாசன் மாவட்டத்தில் கனிகட்டா கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் சூரஜ் ரேவண்ணாவை சந்தித்தேன். அப்போது தன்பாலின சேர்க்கையில் ஈடுபடுமாறு வற்புறுத்தினார். இதனை வெளியே சொன்னால் என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்றுவிடுவேன் என மிரட்டினார்”

என்றார்.

ஆனால் சூரஜ் ரேவண்ணா, ஹொலேநர்சிப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், “சூரஜ் ரேவண்ணா பிரிகேட் அமைப்பின் பொருளா ளராக இருக்கும் சிவகுமார் (30), அவரது நண்பர் சேத்தன்(24) ஆகியோர் ரூ.5 கோடி தராவிட்டால் என் மீது பொய் புகார் தரப்போவதாக மிரட்டுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்..

இதையொட்டி சிவகுமார், சேத்தன், சேத்தனின் 21 வயதான மனைவி ஆகிய மூவர் மீதும் காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்த புகாரை மறுத்துள்ள சிவகுமார், “சூரஜ்ரேவண்ணா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய மறுக்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காவல்துறையினர் சூரஜ் ரேவண்ணாவை கைது செய்துள்ளனர். அவரிடம் புகார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.