புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பள்ளி, கல்லூரி திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக   புதுச்சேரியில் கல்வி நிறுவனங்கள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், பள்ளிகளில் 9 வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலும், கல்லூரிகளும் 16ந்தேதி முதல் திறக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். அதையடுத்து,  நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் தொடங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், புதுச்சேரி மாநில அமைச்சர் நமச்சிவாயம், =  பள்ளி, கல்லூரிகள் திறப்பதை ஒத்தி வைப்பதாக  தெரிவித்துள்ளார்.  தொற்று பாதிப்பு குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கருததுகளின் அடிப்படையில், பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்தி வைக்கும் முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.